Загрузка...

முதலமைச்சர் விஜய் அனைத்து டாஸ்மாக்கையும் மூட வேண்டும்-பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்

திருச்சி - 20.05.26

*டாஸ்மாக்கில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும் - டாஸ்மாக் கடையின் கூடுதல் செலவினங்களை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கை*

*முதலமைச்சர் விஜய் அனைத்து டாஸ்மார்க் கடைகளையும் மூட வேண்டும் - டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை*
திருச்சியில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டாஸ்மாக் மேலாளரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மாவட்ட டாஸ்மார்க் பணியாளர்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு நிர்வாகிகள் சார்பாக இரவு 10 மணிக்கு மேல் கடையில் கணக்கு வழக்குகள் பார்க்க காவல்துறையினர் அனுமதி மறுக்கின்றனர் கடையை விட்டு வெளியேற அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர் எனவும், தமிழக அரசு தற்போது மூடிய டாஸ்மார்க் கடைகளில் உள்ள பணியாளர்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்க வேண்டும் எனவும் , கடந்த ஆறு மாதங்களாக காலி மது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தில் பணியாளர்கள் கடும் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர் நிர்வாகம் இதனால் ஏற்படும் சிரமங்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தும் இதுநாள் வரை செயல்படுத்தப்படவில்லை உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , பணியாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும், காலி மது பாட்டில் திட்டத்தில் ஸ்டிக்கர் பயன்படுத்துவதினால் 10 ரூபாய் கூடுதலாக ஏன் வாங்குகிறீர்கள் என்று வாடிக்கையாளர்கள் செல்போனில் எங்களை படம் பிடித்து கூடுதல் பணம் எடுக்கிறீர்கள் என பொய்யான தகவலை அளிக்கின்றனர். அவர்கள் அளிக்கும் தகவலை நிர்வாகம் அப்படியே நம்பி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும், சரக்கு இறக்கு கூலி சரக்கு பெட்டியில் வரும் பாட்டில்களின் டேமேஜ், காலி மது பாட்டில் எடுக்க தற்பொழுது நியமித்திருக்கும் பணியாளர்கள் கூலி மற்றும் குடோன் வாடகை ஆகியவற்றிற்கு ஏற்படும் செலவினங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்.
காளி மது பாட்டில் திட்டத்தில் 25ஆம் தேதி வரை மட்டுமே செயல்படுவோம் எனவும் அதற்குள் டாஸ்மார்க் நிர்வாகம் அதற்கான மாற்று நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மார்க் அனைத்து தொழிற்சங்க கூட்டு குழு சார்பில் திருச்சி மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் அவர்களுக்கு மனு அளித்தனர்.
இது குறித்து டாஸ்மார்க் ஊழியர்கள் செய்தியாளர்களிடம் கூறும் போது... முதலமைச்சர் விஜய் அனைத்து டாஸ்மார்க் கடைகளையும் மூடிவிட வேண்டும் தற்போது டாஸ்மாக்கில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி செய்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

தமிழ்நாடு அரசு தற்போது மூடியுள்ள கடைகளில் பணிபுரிந்த பணியாளர்கள் மாற்று வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர் அவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்.
டாஸ்மார்க் ஊழியர்களுக்கு நடைமுறை சிக்கல்கள் நிறைய உள்ளன, அரசு கூறும் அனைத்தையும் டாஸ்மார்க் ஊழியர்கள் செய்ய தயாராக உள்ளனர், டாஸ்மார்க் ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தில் கூடுதல் செலவுகளை எங்கள் சொந்த பணத்தில் செய்ய முடியாது அரசே அதற்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு டாஸ்மார்க் நடைமுறையில் சீர் செய்து தர வேண்டும். எங்களது நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
#trichylocalnews #trichynews #trichymalar24x7 #news #tasmac #tasmacnews #tvk #tvkvijay #tvkparty

Видео முதலமைச்சர் விஜய் அனைத்து டாஸ்மாக்கையும் மூட வேண்டும்-பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் канала trichy malar24x7
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять