Загрузка...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் பறந்த விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆதவ்அர்ஜூனா

*திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் பறந்த விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆதவ்அர்ஜூனா*

திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு விமான நிலையத்திற்கு வெளியே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனி விமானத்தில் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து உற்சாகத்துடன் வெளியே வந்த விஜய் அங்கு நின்றவர்களுக்கு கையசைத்து தனது வாகனத்தில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு சென்றார். கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்தார் விஜய், அன்று இரவு கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பின் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்ற விஜய் அதன் பிறகு 5 மாதங்கள் கழித்து இன்று மீண்டும் தஞ்சை செல்வதற்காக திருச்சி மண்ணில் கால் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சையில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மதியம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விஜய், ஆதவ் அர்ஜுனா , புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் தனி விமானத்தில் திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றனர்.

Видео திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தனி விமானத்தில் பறந்த விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆதவ்அர்ஜூனா канала trichy malar24x7
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять