Загрузка...

திமுக நாங்கள் கேட்ட தொகுதிகளை கண்டிப்பாக தருவார்கள் என திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி

திருச்சி - 07.02.26

*பாஜக - அதிமுக கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிந்தே தமிழ்நாட்டை பட்ஜெட்டில் ஒன்றிய அரசு புறக்கணித்து உள்ளார்கள், திமுக நாங்கள் கேட்ட தொகுதிகளை கண்டிப்பாக தருவார்கள் என செல்வபெருந்தகை பேட்டி*

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் மீண்டும் மகாத்மா காந்தி பெயரிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையிலிருந்து பேரணி தொடங்கி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மரக்கடை அருகே பேரணி நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் நிவேதித் ஆல்வா,
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது
காங்கிரஸ் அரசு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியது.
இன்று அந்த திட்டத்தை சிதைக்கும் வகையில் புதிய பெயர் வைத்துள்ளார்கள்.
காந்தியின் பெயரை கெடுக்கும் வகையில் பா.ஜ.க அரசு செயல்படுகிறது என்றார்.
முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில்,
ஆர்.எஸ்.எஸ்ஸால் ஏற்கனவே கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் பெயரை பா.ஜ.க அரசு நீக்கி மீண்டும் அவரை கொலை செய்துள்ளது.
பா.ஜ.க, காந்திக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை தேசத்திற்காக தியாகம் செய்த தியாகிகளுக்கு இந்த அரசு துரோகம் செய்து அவமானப்படுத்தி உள்ளது.
கிராமப்புற பெண்கள் தன்மானத்தோடு வாழ வழி செய்தது தான் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம். இந்த திட்டத்தை இன்று முடக்கும் வகையில் பா.ஜ.க அரசு செயல்படுகிறது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளது பிரதமர் நாடாளுமன்றத்திற்கே வர மறுக்கிறார். நாடாளுமன்றத்திற்கு வர அச்சப்படுகிறார்.
இன்று தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தங்கத்தை எழுதி வைத்து மட்டுமே படிக்க முடியும். இனி பித்தளையில் தான் தாலி கட்ட வேண்டிய நிலை வந்துள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரை பவுன் தாலி இலவசமாக கொடுப்போம் என ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில்,
மத்திய அரசு பா.ஜ.க ஆளாத மாநிலங்கள் கொடுக்கும் நிதியை பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு பிரித்து தருகிறார்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட பா.ஜ.க ஆளாதா மாநில மக்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.
மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெற வைத்தது போல் ஜிராம்ஜி சட்டத்தை திரும்ப பெற வைப்போம்.
போலி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்க்கு உகந்த மண் தமிழ் மண் அல்ல.
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளார்கள். அவர்களால் தமிழ்நாட்டில் எதுவும் செய்ய முடியாது
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் 12 ஆம் தேதி போராட்டத்தை நடத்த முடியாது.
தமிழ் மண்ணை பா.ஜ.கவால் ஒரு போதும் ஆள முடியாது என ராகுல் காந்தி ஏற்கனவே கூறி உள்ளார்.
தமிழ்நாடு மக்கள் தமிழ்நாட்டை ஒரு போதும் தலைகுணிய விடமாட்டார்கள்.
தமிழ்நாட்டிற்கும் ஒன்றிய அரசுக்கும் எந்த சம்மதமும் இல்லாதது போல் தமிழ்நாட்டை பட்ஜெட்டில் நிராகரித்துள்ளார்கள்.
இந்தியாவில் அரசமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என காந்தி கூறியதால் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அவரை கொலை செய்தார்கள்
காந்தியை கொன்ற பின்பும் இன்னும் அவரை பழிவாங்க துடித்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வபெருந்தகை..... செய்தியாளர்கள் தாக்கப்பட்டதை நாங்கள் கண்டித்து இருக்கிறோம், எங்கள் மேல் கூட பல பத்திரிகைகள் வன்மத்துடன் குறை கூறுகிறார்கள் அவர்களிடம் நாங்கள் என்ன சண்டையா போடுகிறோம். தாக்குதல்,மிரட்டுதல் கூடவே கூடாது என்றார்.
திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை நாங்கள் சுமூகமாக தான் இருக்கிறோம். நாங்கள் கேட்ட தொகுதிகளை கண்டிப்பாக தருவார்கள்.
காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அகில இந்திய தலைமை முடிவெடுக்கும்.
அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் தான். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு திமுக தலைவருக்கு பெரிய மனது உள்ளது.
எம்பிக்கள் தன்னை தாக்க முயற்சித்தார்கள் என உண்மைக்கு புறம்பான செய்தியை பிரதமர் கூறியுள்ளார் இதுபோல் எந்த பிரதமரும் பேசியதில்லை பிரதமர் மோடி ஏன் பேசுகிறார் என்பது நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பாஜக அரசு பறித்து விட்டது. பட்ஜெட்டில் ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை. பாஜக - அதிமுக கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிந்தே தமிழ்நாட்டை அவர்கள் புறக்கணித்து உள்ளார்கள்.
ஆட்சியில் பங்கு தருகிறோம் எனக் கூறும் கட்சியுடன் பேச்சு நடத்துகிறீர்களா என்கிற கேள்விக்கு
நாங்கள் என்ன பங்காளிகளா பங்கு தருவதற்கு என பதில் அளித்தார். #trichymalar24x7 #trichylocalnews #trichynews #congressparty

Видео திமுக நாங்கள் கேட்ட தொகுதிகளை கண்டிப்பாக தருவார்கள் என திருச்சியில் செல்வப்பெருந்தகை பேட்டி канала trichy malar24x7
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять