Загрузка...

தேவாரம் | சுந்தரர் | பொன்னார் மேனியனே | திருமழபாடி

தேவாரம் | சுந்தரர் | பொன்னார் மேனியனே | திருமழபாடி

ஏழாம் திருமுறை பதிகம் 24
அன்பும் அருளும் பெற ஓத வேண்டிய பதிகம்

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே

Ponnaar meniyane puliththolai araikku asaiththu
Minnaar senjadai mel milir kondrai aninthavane
Manne maamaniye mazhapaadiyul maanikkame
Anne unnai allaal ini yaarai ninaikene

விளக்கம் :

பொன்போலும் திருமேனியை உடையவனே! இடையில் புலித்தோலை உடுத்து, மின்னல் போல் மின்னுகின்ற சடையில் மிளிர்கின்ற கொன்றைப் பூவை அணிந்தவனே! தலைவனே! விலையுயர்ந்த இரத்தினம் போன்றவனே! திருமழபாடியுள் எழுந்தருளிய மாணிக்கமே! எனக்குத் தாயாய் விளங்குபவனே! உன்னையன்றி யான் வேறு யாரை நினைப்பேன்?

ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்து இருப்பாரே

Eraar muppuramum eriyachilai thottavanai
Vaaraar kongaiyudan mazhapaadiyul meyavanai
Seeraar naavalarkon aarooran uraithathamizh
Paaror eththavallaar paralogaththu iruppaare

விளக்கம்:

அழகு பொருந்திய மூன்று புரங்களும் எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனும், கச்சையணிந்த தனங்களையுடையவளாகிய உமாதேவியுடன் திருமழபாடியுள் விரும்பி வீற்றிருப்பவனும் ஆகிய சிவபெருமானை, புகழ் நிறைந்த திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களாகிய மக்கள் சிவலோகத்தில் இனிது வீற்றிருப்பார்கள்.

Видео தேவாரம் | சுந்தரர் | பொன்னார் மேனியனே | திருமழபாடி канала Tamil Virtual Academy
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять