Загрузка...

திருவாசகம் | மாணிக்கவாசகர் | ஏரார் இளங்கிளியே | சிதம்பரம்

திருவாசகம் | மாணிக்கவாசகர் | ஏரார் இளங்கிளியே | சிதம்பரம்

எட்டாம் திருமுறை 19ஆவது பதிகம் திருத்தசாங்கம்

இறையருள் திறங்களைக் கிளி மொழிவதாக அமைத்து ஓதியது

ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன்
சீர் ஆர் திருநாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன்,
செம் பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவ போல்
எம் பெருமான் தேவர் பிரான் என்று

Er aar ilam kiliye engal perunthurai kon
Seer aar thirunaamam thernthu uraiyaay aarooran
Chem perumaan vennmalaraan paarkadalaan cheppuva pol
Em perumaan thevar piraan endru

விளக்கம்
அழகு பொருந்திய இளமையான கிளியே! எம்முடைய திருப்பெருந்துறை மன்னனது சிறப்புப் பொருந்திய ‘திருநாமத்தை,’ தூய தாமரை மலர் மேலிருக்கும் பிரமனும் பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலும் சொல்வது போல, “திரு ஆரூரன், சிவந்த திருமேனியையுடையவன், எம்பிரான், தேவர் பெருமான்,” என்று ஆராய்ந்து சொல்வாயாக.

சோலைப் பசும் கிளியே தூ நீர்ப் பெருந்துறைக் கோன்
கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும்
ஏதிலார் துண் என்ன மேல் விளங்கி ஏர் காட்டும்
கோது இலா ஏறு ஆம் கொடி

Cholai pasum kiliye thoo neer perunthurai kon
Kolam poliyum kodi kooraay saalavum
Ethilaar thun enna mel vilangi er kaattum
Kothu ilaa eru aam kodi

விளக்கம்
சோலையில் வாழ்கின்ற பச்சைக்கிளியே! தூய்மையான நீர் சூழ்ந்த திருப்பெருந்துறை மன்னனது கொடி யாது? என்று கூறுவாயாக. பகைவர் மிகவும் திடுக்கிட்டு அஞ்சும்படி மேலே விளங்கி அழகுடன் தோன்றும் குற்றமற்ற இடபமே அழகுடைய அவன் கொடியாகும் என்று கூறுவாயாக.

Видео திருவாசகம் | மாணிக்கவாசகர் | ஏரார் இளங்கிளியே | சிதம்பரம் канала Tamil Virtual Academy
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять