யார் இந்த மடையர்கள்☺️🤔 #shorts #sangathamizhantv
யார் இந்த மடையர்கள்? #shorts
தமிழகத்தின் 47 வகையான நீர்நிலைகள் | பழந்தமிழர் நீர் மேலாண்மை-2:https://youtu.be/oZG55H1EdUw
நீரின்றி அமையாது உலகு என்றுசொன்னார் திருவள்ளுவர், அந்த அளவிற்கு உலகில் உள்ளெள்ள உயிரினத்திற்கும் மூலாதாரமாக இருப்பது நீர். இந்த நீரின் பெருமையை கண்டு 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே நீரினை சேமித்து வைக்க எண்ணற்ற நீர் நிலைகளை காட்டியுள்ளனர் நமது முன்னோர்கள். நீர்நிலைகளை காட்டியதோடு மட்டும் அல்லாமல் நீரினை பங்கிட்டு கொள்ளவும், பாதுகாக்கவும் பலரை நியமித்து உள்ளனர்.
பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரை, கால்வாய் வழியாக ஏரிகளுக்கு அனுப்பி வைப்பது, சாதாரண காரியமில்லை. அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை.
ஆற்றில் நீர் குறைவாக போகும்போது, அந்த நீரை முழுவதுமாக தடுத்து, தம் ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்வதில்லை. தமக்கு அடுத்தடுத்து இருக்கும் நீர் நிலைகளுக்கு ஆற்று நீரை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்த, நீர் சமூகத்தின் பிரிவினருக்கு, 'நீராணிக்கர்கள்' என்று பெயர். ஆற்றில் ஓடும் நீரை, ஏரிகளில் சேமித்து, விளை நிலங்களுக்கு சேர்க்கும் பொறுப்பு, இவர்களுடையது.
நீரை கொண்டு வந்து சேர்த்து, அதை கட்டி காப்பவருக்கு, 'நீர்க்கட்டியார்' என்று பெயர். ஏரியில் மீன் பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில், ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது என, ஏரிக்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும், நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்.
ஒரு ஏரியின் உயிர், அதன் கரையில் தான் இருக்கிறது. கரை உடைப்பெடுத்தால், தானும் அழிந்து, தன்னை நம்பி வாழும் மக்களையும் அழித்து விடும். அதனால் தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஏரிக்கரையை காப்பாற்றி, வலுவாக வைத்திருப்பவருக்கு, 'கரையார்' என்று பெயர். இவர்கள் தான், ஏரிக்கரைக்கு முழு பொறுப்பு.
என்ன தான் கரையை வலுபடுத்தினாலும், எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டே இருக்கும். ஒரு ஏரியை உடைத்தால், சுலபமாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.
'ஏரிகளை உடைப்பது, மிகப்பெரிய பாவம்...' என்று, சங்க கால பாடல்கள் கூறினாலும், இதை மதிக்காத ஒன்றிரண்டு அரசர்கள், எல்லா காலத்திலும் இருந்திருக்கின்றனர். நேர்மையான முறையில் போரிட்டு வெல்ல முடியாத எதிரிகள், நீர்நிலைகளை அழித்தொழித்தனர்.
அப்படி, ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டோரை, 'குளத்து காப்பாளர்கள்' என்றழைத்தனர். இவர்கள், ஏரிக்குள் அத்துமீறுபவர்களை விரட்டியடிப்பர்.
நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்டது, ஒரு ஏரி. இதில், ஆடு, மாடுகள் விழுந்து இறப்பதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் உண்டு. அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்தவும், ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசி போன்றவற்றை அழித்து, ஏரியை துாய்மைப்படுத்தவும் ஏற்படுத்தபட்டோர், 'குளத்து பள்ளர்கள்!'
இவர்கள் தான், ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு. ஏரியிலிருந்து திறந்து விடும் நீரை, வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை சேர்க்கும் பொறுப்பு, 'நீர் வெட்டியார்' அல்லது 'நீர்பாய்ச்சி' என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பர்.
பாசனத்திற்காகவும், வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக, ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி மற்றும் துாம்பு போன்ற அமைப்புகள் இருந்தன. மடைகளை திறந்து மூடுவதற்கு, ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்களுக்கு, 'மடையர்கள்' என்று பெயர்.
ஆனால் இன்று நவீனம் என்ற பெயரில் நமது தொழில் நுட்பங்களை மறந்து நீர் நிலைகளை சரியாக பராமரிக்காமல் ஏறி,குளங்களில் வீடுகளை கட்டி நீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.
#SangathamizhanTV #WaterManagement #மடையர்கள் #பழந்தமிழர்தமிழர்நீர்மேலாண்மை #கரிகாலன் #கல்லணை
***************************************************************************************
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q/join
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q
Email ID: sangathamizhantv@gmail.com
Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV
Follow me on Facebook Page: https://www.facebook.com/ChangaTamizhan/
Видео யார் இந்த மடையர்கள்☺️🤔 #shorts #sangathamizhantv канала சங்கத்தமிழன் TV
தமிழகத்தின் 47 வகையான நீர்நிலைகள் | பழந்தமிழர் நீர் மேலாண்மை-2:https://youtu.be/oZG55H1EdUw
நீரின்றி அமையாது உலகு என்றுசொன்னார் திருவள்ளுவர், அந்த அளவிற்கு உலகில் உள்ளெள்ள உயிரினத்திற்கும் மூலாதாரமாக இருப்பது நீர். இந்த நீரின் பெருமையை கண்டு 2000-3000 ஆண்டுகளுக்கு முன்பே நீரினை சேமித்து வைக்க எண்ணற்ற நீர் நிலைகளை காட்டியுள்ளனர் நமது முன்னோர்கள். நீர்நிலைகளை காட்டியதோடு மட்டும் அல்லாமல் நீரினை பங்கிட்டு கொள்ளவும், பாதுகாக்கவும் பலரை நியமித்து உள்ளனர்.
பெருக்கெடுத்து ஓடும் ஆற்று நீரை, கால்வாய் வழியாக ஏரிகளுக்கு அனுப்பி வைப்பது, சாதாரண காரியமில்லை. அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை.
ஆற்றில் நீர் குறைவாக போகும்போது, அந்த நீரை முழுவதுமாக தடுத்து, தம் ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்வதில்லை. தமக்கு அடுத்தடுத்து இருக்கும் நீர் நிலைகளுக்கு ஆற்று நீரை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்த, நீர் சமூகத்தின் பிரிவினருக்கு, 'நீராணிக்கர்கள்' என்று பெயர். ஆற்றில் ஓடும் நீரை, ஏரிகளில் சேமித்து, விளை நிலங்களுக்கு சேர்க்கும் பொறுப்பு, இவர்களுடையது.
நீரை கொண்டு வந்து சேர்த்து, அதை கட்டி காப்பவருக்கு, 'நீர்க்கட்டியார்' என்று பெயர். ஏரியில் மீன் பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில், ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது என, ஏரிக்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுக்கும், நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்.
ஒரு ஏரியின் உயிர், அதன் கரையில் தான் இருக்கிறது. கரை உடைப்பெடுத்தால், தானும் அழிந்து, தன்னை நம்பி வாழும் மக்களையும் அழித்து விடும். அதனால் தான், ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஏரிக்கரையை காப்பாற்றி, வலுவாக வைத்திருப்பவருக்கு, 'கரையார்' என்று பெயர். இவர்கள் தான், ஏரிக்கரைக்கு முழு பொறுப்பு.
என்ன தான் கரையை வலுபடுத்தினாலும், எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டே இருக்கும். ஒரு ஏரியை உடைத்தால், சுலபமாக, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.
'ஏரிகளை உடைப்பது, மிகப்பெரிய பாவம்...' என்று, சங்க கால பாடல்கள் கூறினாலும், இதை மதிக்காத ஒன்றிரண்டு அரசர்கள், எல்லா காலத்திலும் இருந்திருக்கின்றனர். நேர்மையான முறையில் போரிட்டு வெல்ல முடியாத எதிரிகள், நீர்நிலைகளை அழித்தொழித்தனர்.
அப்படி, ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டோரை, 'குளத்து காப்பாளர்கள்' என்றழைத்தனர். இவர்கள், ஏரிக்குள் அத்துமீறுபவர்களை விரட்டியடிப்பர்.
நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்டது, ஒரு ஏரி. இதில், ஆடு, மாடுகள் விழுந்து இறப்பதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் உண்டு. அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்தவும், ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசி போன்றவற்றை அழித்து, ஏரியை துாய்மைப்படுத்தவும் ஏற்படுத்தபட்டோர், 'குளத்து பள்ளர்கள்!'
இவர்கள் தான், ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு. ஏரியிலிருந்து திறந்து விடும் நீரை, வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை சேர்க்கும் பொறுப்பு, 'நீர் வெட்டியார்' அல்லது 'நீர்பாய்ச்சி' என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பர்.
பாசனத்திற்காகவும், வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக, ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி மற்றும் துாம்பு போன்ற அமைப்புகள் இருந்தன. மடைகளை திறந்து மூடுவதற்கு, ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்களுக்கு, 'மடையர்கள்' என்று பெயர்.
ஆனால் இன்று நவீனம் என்ற பெயரில் நமது தொழில் நுட்பங்களை மறந்து நீர் நிலைகளை சரியாக பராமரிக்காமல் ஏறி,குளங்களில் வீடுகளை கட்டி நீருக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.
#SangathamizhanTV #WaterManagement #மடையர்கள் #பழந்தமிழர்தமிழர்நீர்மேலாண்மை #கரிகாலன் #கல்லணை
***************************************************************************************
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q/join
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: https://www.youtube.com/channel/UC0Nf0_j2P9DR-jw5mKxvt2Q
Email ID: sangathamizhantv@gmail.com
Follow me on Telegram: http://t.me/sangathamizhanTV
Follow me on Facebook Page: https://www.facebook.com/ChangaTamizhan/
Видео யார் இந்த மடையர்கள்☺️🤔 #shorts #sangathamizhantv канала சங்கத்தமிழன் TV
Показать
Комментарии отсутствуют
Информация о видео
Другие видео канала
![விவசாயிகளின் வாழ்க்கையை அழிக்கும் திமுக அரசு | ஆரணி நாம் தமிழர் வேட்பாளர் Dr.பாக்கியலட்சுமி #ntk](https://i.ytimg.com/vi/5rC4gyo3ja8/default.jpg)
![தவளை முட்டை ‘டீ’ | ஆச்சரியமூட்டும் தைவான் இரவு சந்தை | Shilin Night Market | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/oaLQ62aR8c8/default.jpg)
![வட சென்னையை கண்டுகொள்ளாத திராவிட காட்சிகள் நாம் தமிழர் வேட்பாளர் மருத்துவர் அமுதினி #ntk4tamilnadu](https://i.ytimg.com/vi/Dq8d0xGeV1o/default.jpg)
![கங்கைக்கரையில் தமிழரின் ஆதிக்கம் | திரைமீளர்கள்-2 | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/gsX-LwkfK00/default.jpg)
![சங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/NoxzlZjJm6o/default.jpg)
![கீழடியில் கிடைத்த பொக்கிசம் | கீழடி அகழ்வாராய்ச்சி | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/S0vVI3QRijU/default.jpg)
![இன்றும் வாழும் ராவணனின் பிள்ளைகள் #shorts #sangathamizhantv #tamil](https://i.ytimg.com/vi/W0WEMTK2hrk/default.jpg)
![விழுப்புரத்தில் வெற்றி பெறும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குனர் மு.களஞ்சியம்.](https://i.ytimg.com/vi/MBKRdavjJwI/default.jpg)
![குண்டக்க மண்டக்க அர்த்தம் தெரியுமா? | இரட்டை சொற்கள் | தமிழின் சிறப்புகள் | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/Nog9RGz87Tc/default.jpg)
![ஓணம் தமிழர் பண்டிகையா? 🤔😍 #shorts #sangathamizhantv #onam #onamcelebration #onam2022](https://i.ytimg.com/vi/_-h-f-SCW-o/default.jpg)
![சோழர்களின் படையில் 60,000 யானைகளா? ஆச்சரியமூட்டும் தகவல் | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/M2U_TTciE0E/default.jpg)
![ஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon #shorts #valari #sangathamizhantv](https://i.ytimg.com/vi/XFKBk0XAt_E/default.jpg)
![தமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/sNtW_MB9OWo/default.jpg)
![ஆங்கிலேயரை அலறவிட்ட வளரி | Strange Weapons of Tamils #shorts Boomerang #valari #sangathamizhantv](https://i.ytimg.com/vi/P97dQaRL-_g/default.jpg)
![வ.உ.சியின் உண்மை முகம்? 😡😡#shorts #sangathamizhantv #vochidambaram #வஉசி](https://i.ytimg.com/vi/hOYRWB5NNE4/default.jpg)
![சங்க இலக்கியங்களில் கடல் வணிகம் | திரைமீளர்கள்-1 | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/PxaaJDDFhzU/default.jpg)
![அதிர்ச்சியூட்டும் அரிசி அரசியல் | உண்ணுவதெல்லாம் உணவல்ல-2| ஹீலர்.சக்திவேல் யுவராஜ் |SangathamizhanTV](https://i.ytimg.com/vi/fe3y9uIVe2I/default.jpg)
![ரோம் மன்னரையே கலங்க வைத்த தமிழர்கள் | Ancient Tamil Trade | திரைமீளர்கள்-4 | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/XtHrJSpyz-k/default.jpg)
![தமிழர்களின் பண்டைய துறைமுகங்கள் | திரைமீளர்கள்-3 | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/RVIy_Bxb-98/default.jpg)
![ஆதி தமிழனின் ஆயுதம்: வளரி | Tamils Ancient weapon: Boomerang or Valari | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/sU1-Ix-2il4/default.jpg)
![மடகாஸ்கரில் தமிழரின் சல்லிக்கட்டு | Jallikattu in Madagascar | SAVIKA | SangathamizhanTV](https://i.ytimg.com/vi/XKZG938rzQ4/default.jpg)