Загрузка...

#ஹயக்ரீவர்#narasimhaswamy#lakshminarasimar#wedding#ஹயக்ரீவர்#templewedding#varahar#slvnhd#8668055984

ஸ்ரீலக்ஷ்மீ வராஹர்,ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹர், ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர்,ஸ்ரீ தந்வந்தரி ஸ்வாமி கோவில் (புளியஞ்சோலை ரோடு )
ஸ்வாமி நகர்
பச்சைப்பெருமாள்பட்டி-621003
("ஸ்ரீவைஷ்ணவ சமுதாய 14 கோத்ர ஸ்ரீலக்ஷ்மீ வராஹர்,ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹர், ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவர், தந்வந்தரி சன்னிதி")
8668055984
நீங்கள் இந்த கோயிலுக்கு வந்தால் என்ன பலன்?

மேற்குத் தொடர்ச்சி மலை யாக இருக்கக்கூடிய கொல்லிமலை அடிவாரம் ஆகிய புளியஞ்சோலை என்று சொல்லக்கூடிய அருவி அருகில் பசுமை மிக்க அமைதியான இடத்தில் அமைந்துள்ளது
இந்த திருக்கோயிலில் அவதாரத்தின் தெய்வமாக இருக்கக்கூடிய வராஹர், நரசிம்மர் ஹயக்ரீவர் மற்றும் தன்வந்திரி பெருமாள் ஒரே இடத்தில் இருப்பதால் அதன் சக்திகள் அபரவிதமானவை எனவே உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
ஒவ்வொரு ஸ்வாமிகளின் தனிச் சிறப்பை இப்பொழுது பார்க்கலாம்
இங்கு கொம்பு வைத்த பன்றி முகம் கொண்ட வராஹ பெருமாள் லட்சுமி உடன் இருப்பதால் ஸ்ரீ லட்சுமி வராஹர் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் சுயம்புவாக பெருமாள் தோன்றிய இடமாகிய ஸ்ரீமுஷ்ணம் , திருமலை திருவிடந்தை ,ஆகிய இடத்தில் இருந்து தீர்த்தம் மற்றும் புனிதமான மண் சமர்ப்பிக்கப்படப்பட்டுள்ளது.
இதனால் மண் சம்பந்தப்பட்ட அதாவது நிலம், வீடு மனை வாங்குவதில் ஏற்படும் தடைகள் நீங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வறுமை நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும். பூமி தொடர்பான தோஷங்கள் நிவர்த்தியாகும்.

அது மட்டும் அல்லாமல் நமது ஜாதகத்தில் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்கள் என்று சொல்லப்படுகிறது களத்தர தோஷம், கால சர்ப தோஷம் தார தோஷம் மாங்கல்ய தோஷம் போன்ற தோஷங்களை நீக்கக் கடிய தலங்களான கொடுமுடி காளகஸ்தி திருநள்ளாறு திருநாகேஸ்வரம் ஆகிய கோயில்களுக்கு நிகரான சுவாமி இந்த நித்திய கல்யாண பெருமாள் என்று சொல்லக்கூடிய ஸ்ரீ லட்சுமி வராஹ பெருமாள், இந்த சன்னதியில் மேற்கொண்ட தோஷங்கள் உள்ள ஆண் பெண் இருபாலரும் இங்கு வந்து பரிகாரம் செய்து கொண்டு இங்கு திருக்கல்யாணம் செய்துகொண்டான் அவர்களுக்கு எப்பேர்பட்ட தோஷங்களும் நீங்கி குழந்தை பேறு உண்டாகும். அதேபோல் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்கள் தங்களுடைய ஜாதகங்களை சுவாமி உடைய பாதத்தில் வைத்து சாற்றி பூஜை செய்தால் கூடிய விரைவில் திருமணம் கைகூடும் என்பது தெய்வ வாக்கு. இவரை வணங்கக் கூடிய தினங்கள் ரேவதி நட்சத்திரம் மற்றும் பஞ்சமி திதி ஆகிய தினங்களில் வழிபாடு செய்ய சிறப்பான நாட்கள் ஆகும்.
அதேபோலவே இங்கு சிங்க முகம் கொண்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் இவருடைய சிறப்பு அபரிவிதமானது இக்கோயிலில் கோயில் இந்த இடத்தில் ஏற்படுவதற்கு முன்னால் இங்கு வசிக்கக்கூடிய பல விவசாய பெருமக்களுக்கு தனது கனவில் வந்து தனக்கு இங்கு ஒரு சன்னதியை உருவாக்க வேண்டும் என்று கூறியதின் பெயரில் இந்த ஆலயமானது நிறுவப்பட்டது இந்த லட்சுமி நரசிம்மர் தாயார் லட்சுமி தேவி நரசிம்மருடைய திருமுகத்தை பார்ப்பது போல் அமைந்திருக்கிறது அதுபோலவே நரசிம்மர் வியக்கதக்க தோன்றிய உக்கிர ஸ்தம்பம் என்று சொல்லக்கூடிய தூண் அதில் இருந்து வெளிப்பட்ட கல்லை இங்கு சுயம்புவாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது , ஆதலால் இந்த நரசிம்மர் வேறு எந்த சன்னதியிலும் காண முடியாத சிரித்த இன்முகத்தோடு காட்சி அளிக்கிறார் இது இந்த ஸன்னதியின் தனிச்சிறப்பு மேலும் உங்கள் குடும்பத்தில் ஏற்படும் இன்னல்கள், தொழில்களில் எதிரிகள் தொல்லை,கண் திருஷ்டி , சாபங்கள் மற்றும் கடன் தொல்லை இருந்து விடுபட இந்த லக்ஷ்மி நரசிம்மரை வழிபடுதல் செய்வது நலம் இவருக்கு உகந்த தினமான பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரம் அன்று செய்யப்படும் ஹோமங்களில் கலந்து கொண்டு உங்கள் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள் நிவர்த்தி செய்து கொள்ளவும், ஸ்வாதி நட்சத்திரம்,பிரதோஷம் சனிக்கிழமை ஆகிய தினத்தில் பானகம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி மன நிறைவு மற்றும் பண வரவு ஏற்படும்.
மேலும் இத்திருகோயிலில் அமைந்துள்ள *ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்* என்று சொல்லக்கூடிய கல்விக்குரிய தெய்வமாக அனைவராலும் வணங்கப்படுபவள் சரஸ்வதி தேவி. கல்வியில் சிறக்க, கல்வி தொடர்பான தோஷங்கள் விலகவும் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும் என்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட சரஸ்வதி தேவிக்கே குருவாக விளங்கக் கூடியவர் ஹயக்ரீவர் தான்,வேதத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய இந்தஹயக்ரீவர், செல்வ வளம் மற்றும் ஞானத்தின் கடவுளாக போற்றப்படுகிறார். இங்கு தாயாருடன் காட்சியளிக்கிறார் இவரை வணங்கும்போது நமது குழந்தைகள் சிறந்த ஞானத்தையும் மற்றும் ஒழுக்கத்தையும் அடைவார், இவரை வழிபாடு செய்வதன் மூலம் உங்கள் குழந்தைகள் போட்டி தேர்வுகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறப்பாக செயல்படுவார்கள் . இவரை வணங்குவதால் வேலை வாய்ப்புகளில் ஏற்படும் சிக்கல்கள் நீங்கி வெளிநாட்டு உத்யோகங்கள்(foreign job opportunity) மற்றும் ப்ரோமோஷன்( promotion) மிக விரைவில் கிடைக்கும்.
இவரை வியாழக்கிழமை மற்றும் திருவோண நட்சத்திர தினத்தில் திருமஞ்சனம் என்று சொல்லக்கூடிய அபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்தது இத்திருக்கோயிலில் குழந்தைகளுக்கு நன்கு ஞானம் பெறுவதற்கு பெருமாளின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட தேன் அந்த குழந்தையின் நாக்கில் தடவுவார்கள் இதனால் அந்த குழந்தைக்கு நல்ல கல்வி ஞானமும் கிடைக்கும் என்பது ஐதீகம் மேலும் திருக்கோயிலில் மாதம் மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று சிறப்புமிக்க லட்சுமி ஹயக்ரீவர் ஹோமத்தில்
அத்தி ,கருங்காலி மற்றும் பல அரிய வகையான மூலிகையால் ஹோமங்கள் செய்யப்பட்டு பின்பு பால், சந்தனம் இளநீர் ,மஞ்சள் திருமஞ்சனம் என்று சொல்லக்கூடிய அபிஷேங்களில் கலந்து கொண்டால் கலந்து கொண்டால் போட்டி தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறப்பாக கிடைக்கும்.
இதே போலவே இரண்டு அமர்ந்த அமிர்த கலசங்களைக் மற்றொன்று கையில் ஆயுர்வேத புத்தகம் கொண்டு பல நோய்களை நீக்கும் தெய்வமாக “தன்வந்திரி பகவான்”

8668055984

Видео #ஹயக்ரீவர்#narasimhaswamy#lakshminarasimar#wedding#ஹயக்ரீவர்#templewedding#varahar#slvnhd#8668055984 канала SLVN-HD TEMPLE
Яндекс.Метрика
Все заметки Новая заметка Страницу в заметки
Страницу в закладки Мои закладки
На информационно-развлекательном портале SALDA.WS применяются cookie-файлы. Нажимая кнопку Принять, вы подтверждаете свое согласие на их использование.
О CookiesНапомнить позжеПринять